ஞாயிறு, 22 அக்டோபர், 2017

சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா--2-8-17--உறவே உயிரே

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய .06/09/2017 அன்று நடந்து முடிந்த காதல்
கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற
கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் : கவிஞர் . பைந்தமிழ்ப் பாமணி சரஸ்வதி பாஸ்கரன்
அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் தலைவர் சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
எனது உயிரே
உன்னை நினைக்கையில்
உயிருக்குள் மின்னல் அடிக்குதடி
உனது இதழ்கள் என்னை
உரசியதால் பட்ட காயம்இன்னும் மாறவில்லை
உன்னைப் பற்றி சிந்தித்தாலே
உள்ளம் தித்திக்குதடி மானே
நீ வைத்த காதல் தீ
உள்ளுக்குள் கனன்று கனன்று
உடலையும் தகிக்கிறது
உன்னை எண்ணியே நாளும் வாழும்
உள்ளம் இது உணரவில்லையா நீ
உன் கண்ணில் நான் பார்க்கிறேன்
நீ பார்க்கும் கண்ணாடியில் என் முகம்
உனக்குத்தெரிய வில்லையா ? நீ
உம்மென்று சொன்னால் போதும்
ஊர்மக்கள் வாழ்த்தஉன்னை
ஊர்வலமாய் அழைத்துப்போக நான் ரெடி
உறவே உன்னிடம் அடகு வைத்த என்
உயிரை மீட்கும் திறனில்லை எனக்கு
உண்மை நிலையைச்சொல்லி சொல்லி
உலர்ந்து போனது என் உதடு
உள்ளம் மலர வந்து விடு
உறவாம் உயிரை மீட்டுவிடு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக