ஞாயிறு, 22 அக்டோபர், 2017

ஊ.ல..ழ..ள ம்தல் இறுதி புதுக்கவிதைப்போட்10-9-17

உங்கள் "பிரபு வாய்ஸ்"ன் ஊலழள உறவுகளுக்கு இனிய காலை வணக்கம்...
-----------------------------------------------------------
முதல்-இறுதி புதுக்கவிதை போட்டி முடிவுகள்.
தேதி: 10-09-2017 செப்டம்பர்..
நடுவர்கள்: நமது தளத்தின் நிர்வாக கவிஞர்கள்...
Selvarany Kanagaratnam
Thanikasalam Thanikash...ஆகியோர்....
------------------------------------------------------------
ஆதரவளித்த அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்...
-------------------------------------------------------------
இவண்: ஊலழள நிர்வாகிகள் குழுமம
முதல்வரி
மொட்டொன்று அரும்பியது மலரும் நாள் பார்த்திருந்தேன்
இறுதி வரி
கட்டவிழ்ந்து ஓடியஎன் கற்பனையும் கலைந்ததடா
மொட்டொன்று அரும்பியது
மலரும் நாள் பார்த்திருந்தேன்
கட்டி வைத்த முல்லை மொக்கு
கட்டவிழும் நாளுக்காக காத்திருந்தேன்
தொட்டணைத்த உறவை விட
தொட்டில் உறவு பெரிதென பூரித்தேன்
துட்ட மனதுடையோரின் கெட்ட வார்த்தை மலடி
பட்டம் மாறிவிட்டதென மகிழ்ந்திருந்தேன்
உருவான நேரம் முதல் ஓராயிரம் கற்பனைகள்
கருவான உனக்காக பத்தியம் இருந்து
உருமாறிப்போனாலும் உடல் இளைத்து மாதா மாதம்
மருத்துவரிடம் சென்று உன்
பருவ வளர்ச்சி கேட்டு உளம் பூரித்தேன்
முட்டி முட்டி நீ உதைத்தாலும்
முடிவில்லாத சந்தோஷம் அடைந்தேன் மருத்துவரின்
அட்டவணைப்படியே மருந்தும் உண்டேன் வயிறைத்
தொட்டுத் தொட்டுத் தடவி இனம் புரியா மகிழ்வு கொண்டேன்
விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடின்று ஆம்
கற்பனயில் மிதந்து நடக்கையில் கால் தடுக்கி விழுந்திட்டேன்
அற்பமாய் போனதடா அதிக சந்தோஷம்
கூடுடைந்து குழப்பம் விளைந்தது கர்ப்பம் கலைந்தது
பாடுபட்ட நாளெல்லாம் பாழாய் போனது
சூடுபட்ட உடல் அனலாய் தகித்தது
கட்டவிழ்ந்து ஓடிய என் கற்பனையும் கலைந்தடா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக