வெள்ளி, 12 மே, 2017

கவிதை

எட்டு வண்ண வானவில்
எட்டாத தூரத்தில் அழகு காட்ட அதை
தொட்ட ணைக்க ஆவல் ஊற அது
தொடு வானமாகிப் போச்சு
வெட்ட வெளியில் நிற்கிறாய்
வில்லைப் போல வளைந்து நீ
எட்டி உதைக்கும் குழந்தையாய்
பட்டனெவே மறைகிறாய்
உதயமாகும் போதெல்லாம்
இதயம் விம்மி நெகிழ்கிறேன்
சதம் நீயே என நாளும் நம்பி
இதமாக சுற்றும் நானொரு தும்பி
மேனிவில்லை வளைத்தே நீ
மோகக்கணை தொடுக்கிறாய்
உன்னோடு விளையாட நினைக்கும்
என்னோடு நீயாட ஏன் மறுக்கிறாய் ?
தொட்டு விட வழியுமில்லை
விட்டுவிட மனமு மில்லை
பட்டெனவே மறைகின்றாய்
எட்டு வண்ண வானவில்லே
வண்ணத்தை எங்கு பிடித்தாய்
வண்ண மயில் தோகையிலா?
எண்ணத்தில் நீயிருந்தால் என்றும்
என் எழுத்துக்குப் பஞ்சமில்லை
புன்னகை புரிகையிலே என்னுள்
பூமழை பொழிகி்றது பெண்ணே
தேனென தித்திக்குது என் மனமே நீ
தரிசனம் தருகையிலே எட்டாத வான வில்லே
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக