வெள்ளி, 12 மே, 2017

கவிதை

பனி விழும் மலர் வனம்
பனி விழும் மலர் வனம்
முனிவரும் விழும் களம்
தனி யொருவனும் மீளா வனம்
கனி விழும் காதல் மனம்
உன் பார்வை என்னுள்
மின்னலாக நுழைந்து
என் பார்வையை பறித்ததால்
உன்னிடம் அடைக்கலம் ஆனேன்
பனி விழும் மலர் வனத்தில்
தேன் மலராய் நீ நின்றால்
உண்ணாமல் போகுமா வண்டு
கண்ணில்லாதபோதும் காட்சி உன் மேலே
பெண்ணே இன்னும் ஏன் மெளனம்?
உன் மனதை திறந்து சொல் அது நீ
பூக்களை கொண்டு வந்தாலும் சரி
வாட்களை கொண்டு வந்தாலும் சரி பதில் தேவை
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக