வெள்ளி, 12 மே, 2017

சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..மனதினிய முதற்கண் 
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
சங்கத்தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமத்தில் 27/04/2017 நடந்து முடிந்த
படம் பார்த்துக்
கவிதை எழுதும் போட்டியில், கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர்: கவிஞர் ஹிம்சானா
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகளுடன்
படக்கவிதை சிறப்புச் சான்றிதழ் போட்டி
உடலால் உயிரினம் வேறுபடும்
உள்ளத்தால் அவை ஒன்றுபடும்
இயற்கை அழகின் தனிப்பிறவி
இனிமை தரும் தனி வரவே
கூண்டுச் சிறைக்குள் என்னைப்போல்
குறைபட்டு கிடக்க விடமாட்டேன்
சிறையிருக்கும் உணர்வு வலியை
சிந்தையில் நானும் உணர்ந்ததால்
திறந்து விடுகிறேன் கூண்டை
பறந்து போங்கள் நீங்கள் இந்த
பாவைக்கும் சுதந்திரம்வேண்டி
தங்கு தடை இனி இல்லை
தேசம் முழுதும் உங்கள் எல்லை
சரஸ்வதிராேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக