வெள்ளி, 12 மே, 2017

சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி யே. வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே.
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்
கவிஞர்கள் [ 14/3/17ம் நாள்
நடந்து முடிந்த விதியை வெல்வோம் வெளியே வா
பெண்ணே எனும் தலைப்பில் பாரதிதாசன் கவிதை எழுதி
தேர்வு பெற்றவர்கள்....
சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார்கள் கவிதை எழுதிய அனைத்து பாவலர்களுக்கும் வாழ்த்துக்கள்
சிறப்பான கவிதைகளை தேர்வு
செய்த நடுவர் கவிஞர் ஏ.எச்.ஹிம்ஸானா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
தலைமை நிர் வாகி ந. பாண்டியராஜன் *
விதியை வெல்வோம் வா
வெளியே பெண்ணே
அடுப்படி ஞானம் போதும்
அடுத்தபடி காலடி வைப்போம்
கணிகையர் என்றால்
கட்டுப்படுவதற்கும் கலங்கி நிற்கவுமா
கட்டிலுக்கும் தொட்டி ல்l ஆட்டுவதற்கு மட்டும்தானா ?
பெண்களை ஆண்கள்
புண்ணாக்கும் எண்ணம்
புரையோடிப்போனால்
என்னாகும் நாடு?
கொண்டாடப்பட வேண்டிய
பெண்களை கயவர்கள்
துண்டாடுகிறத் தொடர்
துயரங்கள் இனியும் படராமல் கருவறுப்போம்
எட்டாதெனினும்
தட்டிப்பறிக்கும்
கட்டுடல் காமக் காளையரை
தொட்டாற்சுருங்கி அல்லபெண்கள் என
தொட்ட கைகளை வெட்டுவோம்
வேதனைகளைச் சுமந்து
வீட்டிற்குள் முடங்கியது போதும்
வீதியில் வரும் சோதனகளையும்
ஊதித்தள்ளும் துணிவுகொள் பெண்ணே !
சாதிக்கப் பிறந்தவள் நீ
ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு
அடங்கி கிடக்காதே
தடங்கல்களை தகர்த்தெறி
காலச்சுழற்சி இப்போது
கண்டிப்பாய் வேண்டும்
ஞாலம் உயர நீ
விதியை வென்று வா
வெளியே பெண்ணே !
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக