புதன், 9 செப்டம்பர், 2015

ஹைகூ கவிதைகள் -வல்லமை --2-9-2015

என் ஹைகூ கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி
Home » இலக்கியம், கவிதைகள் » ஹைக்கூ
ஹைக்கூ
Wednesday, September 2, 2015, 2:34
இலக்கியம், கவிதைகள்


-சரஸ்வதி ராசேந்திரன்
மழை
வாடும் வேருக்கு
நீர் விடும்
இயற்கை!
அமாவாசை
நிலவு தொலைந்த
சோகத்தில் முகம்
இருண்டுகிடக்கிறது
வானம்!
முழு நிலவு
வான் குளத்தில்
மலர்ந்தது
வெண் தாமரை!
அலைகள்
கரைப்பார் கரைத்தால்
பாறையும்
கரையும்!
கறையான்
சேமித்த புத்தகங்களைச்
சில நொடிகளுக்குள் படித்துக்
கரைத்துக் குடித்தது!
விண்மீன்கள்
வானம் முழுதும்
மத்தாப்பு சிதறல்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக